அம்மா » அழகுக்குறிப்பு » செம்படை முடி கறுக்க தைலம்
செம்படை முடி கறுக்க தைலம்
ஒரே மாதத்தில் செம்படை முடி கருமையாக வர இந்த தைலம் உதவும்.
தேவையான பொருட்கள்
1. தேங்காய் நெய் – 1 லீட்டர்
2. மருதோன்றி இலையை அரைத்து வடைகளாக செய்து காய வைத்தது – 5
3. அவுரி அல்லது நீலி என்கின்ற கீரைச்சாறு – 1 லீட்டர்
4. கடுக்காய் – 15 காய்
5. கார் போக அரிசி – 10 கிராம்
6. நெல்லி வற்றல் – 15 கிராம்
7. பெடுதலை சாறு – 1/2 லீட்டர்
8. முதியார் குந்தல் அல்லது ஒளவையார் குந்தல் – 10 கிராம்
9. வெட்டிவேர் – 10 கிராம்
இந்த சரக்குகளைச் சுத்தம் செய்து, அதை பசும்பாலில் மைபோல அரைத்துக் கொள்ளவும். எண்ணை, இலைச் சாற்றுடன் அரைத்த விழுதையும் மருதோன்றி வடையையும் போட்டு, ஒரு வாய் அகன்ற கெட்டியான பாத்திரத்தில் போட்டு காய்ச்சி, விழுதுகள் மணல் பதம் வந்ததும் இறக்கி, மறுநாள் வடிகட்டி, குப்பிகளில் பத்திரப்படுத்தி, தினமும் தலையில் தடவிவர முடி நன்றாக கறுக்கும்.




உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட